Thursday, April 16, 2009

கொங்கு நாடு முன்னேற்ற்ப்பேரவையை ஆதரியுங்கள்



கழகங்களின் மீதும்,காங்கிரசின் மீதும் வெறுத்துப்போன கொங்குநாட்டு மக்களுக்கு ஒரு அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி கொங்கு நாடு முன்னேற்றப்பேரவை.
1.மிக முக்கியமாக கடந்த 60 வருடங்களாக தமிழக பொருளாதார வளர்ச்சியில் கொங்குமண்டலத்தின் பங்கு அசாதாரணமானது.
2.இதற்கு உதவியாக எந்த பங்களிப்பையும் மத்திய,மாநில அரசுகள் செய்யவில்லை.உள்கட்டமைப்பை பொருத்தவரைபடுகேவலமான நிலையில் உள்ள இம்மண்டலத்தை தி.மு.க தொடர்ந்து புறக்கணித்துவருகிறது.
3.மாநில வருவாயில் 40% பங்கை கொடுக்கும் இம்மண்டலத்தை புறந்தள்ளிவிட்டு சென்னையைச்சுற்றியே பாலங்களும்,சாலைகளும் அமைத்து வருவது எந்த வகையில் நியாயம்?.
இதை முன்னிறுத்தியே இத்தேர்தலில் 12 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
கோவையில் மாநில பொதுச்செயலாளர் திரு,ஈசுவரன் அவர்களும்,பொள்ளாச்சியில் மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி அவர்களும் போட்டியிடுகின்றனர்.
கொங்கு நாட்டு வளர்ச்சியில் அக்கறை உள்ள அனைவரும் கொங்குநாடு முன்னேற்றப்பேரவை வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.